மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும். இங்கே அழுத்துக
Monday, August 20, 2012
Tuesday, August 7, 2012
ஆறுமுக நாவலர் வரலாறு

ஆறுமுக நாவலர் குருபூசை
திருமந்திரம்
திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல் ஒன்பது வரையான திருமுறைகள் தோத்திர வகையையும், பத்தாவது திருமுறை சாத்திர வகையையும், பதினொன்றாவது திருமுறை பிரபந்த வகநயையும், பன்னிரண்டாவது திருமுறை புராணவகையையும் சாரும்.
மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க
மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க
மூலபாடம்
கி பி 1812 இல் முதன் முதலில் அச்சான திருக்குறள் - மூலபாட முகப்பும் கடவுள் வாழ்த்துப் பகுதியும்.
மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும்.
மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும்.
மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க
Monday, August 6, 2012
Sunday, August 5, 2012
தமிழ் அகராதி
ஒவ்வொரு தமிழ் குடிமகனும் கட்டாயம் கற்கவேண்டிய ஒரு நூலாகும்.
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க
Tuesday, July 10, 2012
ஔவையார்
ஒளவை என்ற சொல்லின் பொருள்
ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களை குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.ஔவையார் மிகவும் மதிநுட்பம் மிக்கவர்.தன்னலம் கருதாமல் சேவை செய்யக்கூடியவர்.சோழர்கால அரசர்களுக்கு ஔவையாரை மிகவும் பிடிக்கும்.அரசு விழாக்களில் பங்கேற்பது எப்பொழுதும் ஔவையாருக்கு தனி அழைப்பு வந்துவிடும்.
குலோத்துங்க மன்னன் முடிசூட்டுவிழாவில் ஔவையாரும் பங்கேற்றார்.பல அமை ச்சர்களும்,புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர்.அப்பொழுது ஔவையார் மன்னனை வாழ்த்தி பாட எழுந்தார்.மன்னரும்,அவையோரும் ஔவயார் என்ன வாழ்த்தி பாடப்போகிறர் என ஆவலுடன் பார்த்துகொண்டிருந்தனர்.அப்பொது ஔவையார்"வரப்புயர"எனச்சொல்லி விட்டு அமர்ந்துவிட்டார்.
இதனைகேட்ட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஔவையாரே எழுந்து இதற்கு பின் வருமாறு விளக்கம் கூறினார்.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.
Subscribe to:
Comments (Atom)


.jpg)


